கல்லூரி மாணவனை பீர் பாட்டிலால் தாக்கிய மர்மநபர்கள்


கல்லூரி மாணவனை பீர் பாட்டிலால் தாக்கிய மர்மநபர்கள்
x

ஆலங்குடி அருகே கல்லூரி மாணவனை பீர் பாட்டிலால் தாக்கிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

மாணவர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்த துரைராஜ் மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவர் ஆலங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் வேதியியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அதே கிராமத்தை சேர்ந்த நண்பர் பிரகாஷ் என்பவருடன் கல்லூரி அருகில் உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 3 பேர் ரஞ்சித்குமாரிடம் கொத்தமங்கலம் திருவிழாவில் எங்கள் பசங்களை அடித்தது யார் என கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் ரஞ்சித்குமாரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று ஆலங்காடு தைலமரக்காட்டில் வைத்து 6 பேர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி உள்ளனர். மேலும் பீர் பாட்டிலால் ரஞ்சித்குமார் தலையில் குத்தியதில் அவர் படுகாயமடைந்தார்.

வலைவீச்சு

இதையடுத்து அவரை ஆலங்காடு பஸ் நிறுத்தத்தில் விட்டு, விட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதையடுத்து படுகாயமடைந்த ரஞ்சித்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவனை தாக்கிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story