புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட விழிப்புணர்வு கோலப்போட்டி


புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட விழிப்புணர்வு கோலப்போட்டி
x

புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் மற்றும் கற்போரை ஊக்குவிக்கும் வண்ணம் விழிப்புணர்வு கோலப்போட்டி அரிமளம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சுதந்திரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் நிலவழகன், அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் சிறந்த கோலங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் தன்னார்வலர்களிடம் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு நூல், எழுதுபலகை, எழுதுகுச்சி, நோட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சுகன்யா மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.


Next Story