ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி


ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலி
x

ரெயிலில் அடிபட்டு ஒருவர் பலியானார்.

திருச்சி

திருச்சி டவுன் ரெயில் நிலையத்துக்கும்-ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்துக்கும் இடையே ரெயில் தண்டவாளத்தில் சம்பவத்தன்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு காயத்துடன் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கிராமநிர்வாக அலுவலர் பாலாம்பிகா கொடுத்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story