வடகாட்டில் பெரியார் பிறந்தநாள் கவியரங்கு


வடகாட்டில் பெரியார் பிறந்தநாள் கவியரங்கு
x

வடகாட்டில் பெரியார் பிறந்தநாள் கவியரங்கு நடைபெற்றது.

புதுக்கோட்டை

வடகாடு:

வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கிற்கு சங்கத்தின் கிளை தலைவர் எஸ்.டி. பஷீர் அலி தலைமை தாங்கினார். கருத்துரையாளர் கரு.காளிமுத்து கவியரங்கை தொடங்கி வைத்தார். இதில் மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கலை இலக்கிய நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட கவிஞர்கள் கவிதை வாசித்தனர். மேலும் இதில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கருப்பையா வரவேற்றார். முடிவில் தங்க.திருப்பதி நன்றி கூறினர்.


Next Story