அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி


அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
x

அம்பல் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்பல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அருள்செல்வி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அம்பல் ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி கலந்து கொண்டு 72 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சிவபாலாஜி, வார்டு உறுப்பினர் காந்திராஜன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story