குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை


குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 31 May 2023 5:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:14 AM GMT)

குடிநீர் தொட்டியை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் தேவைக்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு அருகில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும், கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகரிகள் உடனடியாக குடிநீர் தொட்டியை புதிதாக கட்டிட தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story