மக்களை தேடி மருத்துவ திட்டம் குறித்து ஆய்வு


மக்களை தேடி மருத்துவ திட்டம் குறித்து ஆய்வு
x

முல்லை கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் த.ரா.செந்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் 102 ரெட்டியூர் ஊராட்சி, முல்லை கிராமங்களில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து முல்லை கிராமத்தில் நடைபெற்று வந்த மக்களை தேடி மருத்துவம் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு நேரடியாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டு அறிந்தார்.

ஆய்வின் போது ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செ.மதன்ராஜ், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story