சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை


சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை
x

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை அக்ராவரம் கிராமத்தில் மலைமீது அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத விழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்் தேதி வரை தொடர்ந்து 5 சனிக்கிழமை சீனிவாச பெருமாளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்யப்பட்டு, அன்னதானமும் நடைபெறுகிறது

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிற½்பு பூ அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story