விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளி பக்கமுள்ள பெரியபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரீஷ்குமார் (வயது 33). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். இதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story