வாலிபர் தீக்குளித்து தற்கொலை


வாலிபர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

அண்ணன் இறந்த சோகத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் ஆசாகுளம் என்.எஸ்.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி மகன் சிவா(வயது 23). இவர் விழுப்புரத்தில் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். சிவாவின் அண்ணன் பிரகாஷ்(28) என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். அந்த சோகத்தில் சம்பவத்தன்று மனமுடைந்த சிவா, மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story