பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்


பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தல்
x

பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

வேலூர்

வேலூர்

பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வேலூர் மாவட்ட குழு செயலாளர் ஜி.லதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனை தவிர்க்க காட்பாடி முதல் பாகாயம் வரை, காட்பாடி முதல் தொரப்பாடி வரை, சத்துவாச்சாரியிலிருந்து சி.எம்.சி. வழியாக மாங்காய் மண்டி வரை மேம்பாலங்கள் அமைத்திட வேண்டும். காட்பாடி பழைய பாலாறு மேம்பாலம் இணைக்கும் வழியை சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊசூர் அருகே உள்ள 90 ஏக்கர் முந்திரி தோப்பு நிலப்பகுதியில் வேலூர் மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை- பெங்களூரு இடையில் வேலூர் மையப்பகுதிய்ல் சீன நிறுவன ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் வேலூர் பகுதியில் தொழிற்பூங்கா அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நகர பஸ்கள் நிற்க நிழற்குடை இல்லை. அங்கு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் கதவுகள் இல்லை. கடைகள் ஏலம் விடுவது 6 முறைகளுக்கு மேல் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணைக்கட்டு தொகுதியில் மலர்கள் அதிகம் உற்பத்தி ஆவதால் சென்ட் தொழிற்சாலையும், குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம் பகுதிகளை மையப்படுத்தி குடியாத்தம் பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலையும் அமைத்திட வேண்டும்.

பாலாற்றில் நீர்வரத்து உள்ளதால் தடுப்பணை அமைக்க வேண்டும். மேல்அரசம்பட்டு அணைக்கட்டு திட்டத்தையும், பேரணாம்பட்டு பத்திரப்பல்லி அணைக்கட்டு திட்டத்தையும் விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

=========


Next Story