சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு


சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
x

சாட்சி விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பட்டுள்ளது

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே உள்ள ஆண்டவர் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). இவர் கடந்த 3.8.2017 அன்று கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டை மூலவாய்க்கால் என்ற இடத்தில் மோட்டார்சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் மோதி இறந்தார். இதேபோல் பங்களாப்புதூர் அண்ணாநகரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (75) என்பவர் கடந்த 24.2.2017 அன்று உப்புக்கார பள்ளம் என்ற இடத்தில் சைக்கிளில் சென்ற போது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் மோதி இறந்தார்.

கோபி அருகே உள்ள டி.ஜி.புதூர் நேருநகரை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சங்கர் (31). கடந்த 29.3.2019 அன்று வீட்டின் முன்பு அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த போது இவரிடம் செல்போன் பறித்த வழக்கில் 3 பேரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்தனர். இந்த 3 வழக்குகளிலும் அப்போதைய பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். தற்போது அவர் சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் 2 விபத்து வழக்குகள் மற்றும் செல்போன் பறிப்பு வழக்கு கோபி முதலாம் வகுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த 3 வழக்குகளிலும் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் ஆஜராகாத நிலையில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி சாட்சி விசாரணைக்கு ஆஜராக கூறி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.


Next Story