222 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


222 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x

222 பயனாளிகளுக்கு சு.ரவி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவி வழங்கினார்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி ஜமாபந்தி தொடங்கியது. நேற்று மாலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாவட்ட அலுவலர் முரளி தலைமை தாங்கினார். தாசில்தார் சண்முகசுந்தரம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி கலந்து கொண்டு 49 பேருக்கு பட்டா, 35 பேருக்கு நரி குறவர்களுக்கான சாதி சான்றிதழ் உள்பட 222 பயனாளிகளுக்கு ரூ.91 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள நலத் திட்டங்களை வழங்கினார்.

அரக்கோணம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பிரகாஷ், தலைமையிட தாசில்தார் சமரபுரி, வருவாய் ஆய்வாளர்கள் ஜெயபால், தெரேசா, கமல கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் நெடுஞ்செழியன், கலைவாணன், லட்சுமி நாராயணன், ராஜேஷ் உள்பட அலுவலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story