பாம்பு கடித்து தொழிலாளி சாவு


பாம்பு கடித்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 31 May 2023 5:34 PM GMT (Updated: 1 Jun 2023 6:45 AM GMT)

பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 48). இவர் அதே கிராமத்தை சேர்ந்த கருணாநிதி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கரும்புகளுடன் சுற்றி இருந்த பாம்பு அவரைக் கடித்தது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story