குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி


குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
x

மயிலாடியில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

மயிலாடியில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

மயிலாடி காமராஜர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது36), கல் சிற்ப தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

சுரேஷ் நேற்று மாலையில் மயிலாடி காமராஜர் நகரில் உள்ள ஒரு குளத்திற்கு குளிக்க சென்றார். அதன்பின்பு வெகு நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்தில் தேடி சென்றனர். அப்போது சுரேஷ் அணிந்திருந்த ஆடைகள் குளத்தின் கரையில் இருந்தன. தொடர்ந்து குளத்தில் இறங்கி தேடிய போது சுரேஷ் பிணமாக மீட்கப்பட்டார்.

அவர் குளத்தில் குளிக்க இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி இறந்ததாக ெதரிகிறது. இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குளிக்க சென்றவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story