அயோத்தியாப்பட்டணம் அருகேசமையல்காரர் மர்ம சாவு வழக்கில் வாலிபர் கைது


அயோத்தியாப்பட்டணம் அருகேசமையல்காரர் மர்ம சாவு வழக்கில் வாலிபர் கைது
x

அயோத்தியாப்பட்டணம் அருகே சமையல்காரர் மர்ம சாவு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்,

அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 35). சமையல்காரரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அயோத்தியாப்பட்டணம் கோமு நகரில் மயங்கி கிடந்தார். உடனே அவரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து சமையல்காரர் மர்மமான முறையில் இறந்தது குறித்து காரிப்பட்டி போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் விசாரணையில், அயோத்தியாப்பட்டணம் கோமு நகர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (27) என்பவரை, பழனிசாமி குடிபோதையில் தொந்தரவு செய்ததால், அந்த வாலிபர் எதிர்பாராமல் தாக்கியதில் காயமடைந்துள்ளார். அதன்பிறகு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கொலை செய்யும் நோக்கமின்றி தாக்கியதாக தேவேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story