அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில்அசுரனை வதம் செய்யும் மகிஷாசூரமர்த்தனம் நிகழ்ச்சி


அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில்அசுரனை வதம் செய்யும் மகிஷாசூரமர்த்தனம் நிகழ்ச்சி
x

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அசுரனை வதம் செய்யும் மகிஷாசூரமர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூரில் பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இந்த கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவுக்காக கடந்த 16-ந் தேதி பூச்சாட்டப்பட்டது. முதல்நாள் அசுரனை வதம் செய்யும் மகிஷாசூரமர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக புதுப்பாளையம் வனக்கோவிலில் இருந்து செல்லம்பூர் அம்மன் கோவிலுக்கு அலங்கரிக்கப்பட்ட குதிரை முன்செல்ல சப்பரத்தில் உற்சவ அம்மனை வைத்து பக்தர்கள் தோளில் சுமந்து சென்றார்கள். இதைத்தொடர்ந்து கோவிலில் குண்டம் அமைக்கப்படும் இடத்தில் எருமை பலி கொடுக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அசுரனை அம்மன் வதம் செய்துவிட்டதாக பக்தி கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர் பலி கொடுக்கப்பட்ட எருமையின் உடல் அந்த இடத்தில் புதைக்கப்பட்டு அதில் நடுகல் நட்டு மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஏராளமான எருமைகளை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார்கள். அடுத்த மாதம் 5-ந் தேதி குண்டம் விழாவும், 7-ந் தேதி முதல் 4 நாட்கள் தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது.


Next Story