மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்


மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x

கோப்புப்படம்

மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

புதுடெல்லி,

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்துக்கு பின் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது:-

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான உத்தரவாதங்களில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

அதன்படி, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபர் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று கூறினார். புவனேஷ்வர், நவி மும்பை மற்றும் கோவா ஆகிய மூன்று இடங்களில் போட்டிகளை நடத்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்மொழிந்துள்ளது.


Next Story