ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி ஏ.டி.கே மோகன் பகான் அணி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி ஏ.டி.கே மோகன் பகான் அணி வெற்றி
x

image courtesy: Odisha FC twitter

கொல்கத்தாவில் இரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான்-ஒடிசா எப்.சி அணிகள் மோதின.

கொல்கத்தா,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று மாலை நடந்த ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை தோற்கடித்து 7-வது வெற்றியை பெற்றது.

கொல்கத்தாவில் இரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஏ.டி.கே மோகன் பகான்-ஒடிசா எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான் அணியில் திமித்ரி ஆட்டத்தின் 3 மற்றும் 80-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஏ.டி.கே மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி 8-வது வெற்றியை ருசித்தது. இன்று இரவு 7.30 மணிக்கு கொச்சியில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுகின்றன.


Next Story