ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி-பெங்களூரு அணிகள் மோதின.

பெங்களூரு,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி - பெங்களூரு அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் சிவசக்தி நாராயணன் ஆட்டத்தின் 15 மற்றும் 23-வது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் அடித்தார். மேலும், ரோகித் குமார் ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னை அணி சார்பில் எட்வின் சிட்னி ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story