சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் அபய் சிங் 'சாம்பியன்'


சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீரர் அபய் சிங் சாம்பியன்
x

ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

சென்னை,

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இந்திய தொடருக்கான சென்னை சுற்று சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்தது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 11-4, 11-3, 11-4 என்ற நேர்செட்டில் எகிப்தின் காலித் லாபிப்பை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் எகிப்து வீராங்கனை கென்சி அய்மான் 11-7, 11-2, 11-6 என்ற நேர்செட்டில் இந்தியாவின் சுனைனா குருவில்லாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வசப்படுத்தினார். பட்டம் வென்ற இருவருக்கும் தலா ரூ.9¾ லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.


Next Story