தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் ஸ்ரீகாந்த் வெளியேற்றம்


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றுடன் ஸ்ரீகாந்த் வெளியேற்றம்
x

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த் முதல் சுற்றுடன் தோல்வியடைந்து வெளியேறினார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 59-வது இடத்தில் உள்ள இந்திய இளம் வீரர் கிரண் ஜார்ஜ் 21-18, 22-20 என்ற நேர் செட்டில் 9-ம் நிலை வீரரும், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான ஷி யுகிக்கு (சீனா) அதிர்ச்சி அளித்தார். இளம் நட்சத்திரம் இந்தியாவின் லக்ஷயா சென் முதல் ரவுண்டில் 21-23, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் வாங் ஜூ வெய்யை (சீனதைபே) விரட்டினார். இந்த வெற்றிக்காக அவர் 70 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.

அதே சமயம் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 8-21, 21-16, 14-21 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கிடம் வீழ்ந்தார். வெங் ஹாங் அடுத்து கிரண் ஜார்ஜூடன் மோதுகிறார். இதே போல் சாய் பிரனீத், சமீர் வர்மா, பிரியான்ஷூ ரஜாவத் ஆகியோரும் முதல் சுற்றுடன் நடையைக் கட்டினர்.


Next Story