கடற்கரை சாலையில் கோலப்போட்டி


கடற்கரை சாலையில் கோலப்போட்டி
x

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் கோலப்போட்டி நடந்தது.

புதுச்சேரி

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகம், இந்திய சுற்றுலாத்துறை தெற்கு பிராந்தியம் சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் இன்று காலை கோலப்போட்டி நடந்தது. இந்திய சுற்றுலாத் துறை தெற்கு பிராந்திய இயக்குனர் முகமது பாரூக், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு கோலப்போட்டியை தொடங்கி வைத்தனர்.

புள்ளிக்கோலம், ரங்கோலி, டிசைன் கோலம் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்வத்துடன் கலந்துகொண்டு கோலம் வரைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 பரிசுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆறுதல் பரிசாக ஒவ்வொரு பிரிவிலும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பரிசுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.

போட்டிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் செய்திருந்தனர். முன்னதாக போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் புடவை, சர்க்கரை உள்ளிட்டவை அடங்கிய பை வழங்கப்பட்டது.


Next Story