சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்ற வாலிபர் கைது


சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்ற வாலிபர் கைது
x

சட்டவிரோதமாக சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

சட்டவிரோதமாக சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக...

புதுச்சேரி திப்புராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 34). இவர் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை சட்ட விரோதமாக படகில் கடலுக்குள் அழைத்து செல்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பாண்டி மெரினா கடற்கரைக்கு சென்றனர். அப்போது ராஜேந்திரன் 4 சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகில் ஏற்றிக்கொண்டு கரை திருப்பிக்கொண்டிருந்தார்.

வாலிபர் கைது

அப்போது ராஜேந்திரன் எந்த வித அனுமதியும் இல்லாமலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் சுற்றுலா பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் படகையும் பறிமுதல் செய்து கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story