கொத்தனார் வீட்டில் நகை, பணம் திருட்டு


கொத்தனார் வீட்டில் நகை, பணம் திருட்டு
x

வில்லியனூர் அருகே கொத்தனார் வீட்டில்நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே கொத்தனார் வீட்டில்நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை, பணம் திருட்டு

வில்லியனூர் அருகே கீழூரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 62), கொத்தனார். இவரது மகன்கள் பச்சையப்பன், அய்யப்பன். இவர்களும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். ரங்கநாதன் தனது பழைய வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் மகன், மருமகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். பழைய வீட்டை பூட்டி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பழைய வீட்டின் கதவை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்தனர். அங்கு மர பீரோவில் வைத்திருந்த 2½ பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரொக்கப்பணத்தை அவர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

நேற்று ரங்கநாதன் பழைய வீட்டுக்கு சென்றபோது, கதவு உடைக்கப்பட்டு, நகை, பணம் திருடு போனது தெரியவந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா மற்றும் போலீசார் திருட்டு நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மஆசாமிகள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story