ரூ.12¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்


ரூ.12¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
x

ரூ.12¼ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் சாய் சரவணன்குமார் திறந்து வைத்தார்.

வில்லியனூர்

ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் சார்பில் ரூ.12.35 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சாய் சரவணன்குமார் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் வெங்கடேசன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் கருத்தையன் மற்றும் பா.ஜ.க. தொகுதி தலைவர் தியாகராஜன், குடிநீர் பொறுப்பாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்மூலம் துத்திப்பட்டு, தொண்டமாநத்தம் பேட், கடப்பேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள்.


Next Story