தற்கொலைக்கு முயன்ற பெண் கைது


தற்கொலைக்கு முயன்ற பெண் கைது
x

குழந்தை, பாட்டியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலையில் ஈடுபட்டது ஏன்? என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

காரைக்கால்

குழந்தை, பாட்டியை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலையில் ஈடுபட்டது ஏன்? என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

குழந்தை, பாட்டி கொலை

காரைக்காலை அடுத்த அக்கரைவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மனைவி துர்காலட்சுமி (வயது 35). இவருக்கு 4 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பிறகு துர்காலட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். அங்கு தாய் தமிழரசி (65), தந்தை பரமசிவம் (75), சகோதரர்கள் ஆண்டவர் (40), நடராஜன் (38), பாட்டி வேதவல்லி (85) ஆகியோர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 26-ந் தேதி அதிகாலை பாலுக்காக அழுத தனது 4 மாத குழந்தையை, கழுத்தை நெரித்து கொலை செய்தார்.மேலும் ஆத்திரம் தீராத அவர், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினரை மண் வெட்டியால் சரமாரியாக வெட்டினார். இதில் தாய், தந்தை, பாட்டி மற்றும் சகோதரர்கள் 2 பேர் என 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் துர்காலட்சுமி கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். காயம் அடைந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி வேதவல்லி இறந்துபோனார். இது தொடர்பாக நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

பால் சுரக்கவில்லை

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்ற துர்காலட்சுமி உள்ளிட்டவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதையடுத்து குழந்தை, பாட்டியை கொலை செய்த குற்றத்துக்காக துர்காலட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், பெற்ற குழந்தைக்கு, தாய்பால் அதிகம் சுரக்காத காரணத்தால், பால் கொடுக்க முடியாமல் தவியாய் தவித்து வந்தேன். குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் யாரும் அதற்கு உதவவில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு குழந்தையையும், மற்றவர்களை கொலை செய்ய முயன்றேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story