தபால்துறையில் வேலை


தபால்துறையில் வேலை
x

இந்திய தபால் துறையில் ‘கிராமின் தேக் சேவாக்’ (ஜி.டி.எஸ்) பணி அடிப்படையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் 12,828 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உள்ளூர் மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் அடிப்படை அறிவும் பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.

11-6-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 'மெரிட் லிஸ்ட்' எடுக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

10-ம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்கள் மட்டுமே கணக்கிடப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-6-2023.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.


Next Story