பள்ளி மாணவர்கள் பையில் ஆணுறை, சிகரெட்டுகள் கண்டெடுப்பு


பள்ளி மாணவர்கள் பையில் ஆணுறை, சிகரெட்டுகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 30 Nov 2022 9:36 PM GMT (Updated: 30 Nov 2022 9:36 PM GMT)

பெங்களூருவில் பள்ளி மாணவர்கள் பைகளில் ஆணுறை, சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.

பெங்களூரு-

ஆணுறை சிக்கியது

பெங்களூருவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என்று சோதனை நடத்தும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு, ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கூட்டமைப்பு உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அப்போது சில தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அதாவது மாணவர்களின் பைகளில் செல்போன்கள், சிகரெட்டுகள், ஆணுறைகள், லைட்டர்கள், போதைப்பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

10 நாட்கள் விடுப்பு

இதுபோல ஒரு மாணவியின் பையில் இருந்து ஆணுறை, வாய்வழி கருத்தடை மருந்துகள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்த மாணவியிடம் கேட்டபோது அவள் தனது நண்பர்கள் தனக்கு தெரியாமல் பையில் ஆணுறைகளை போட்டதாக கூறினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்த ஆசிரியர்கள், அவர்கள் தவறான வழியில் செல்வது பற்றி கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கண்ணீர் விட்டனர்.

இதையடுத்து மாணவர்களை கவுன்சிலிங் அழைத்து செல்லும்படி ஆசிரியர்கள், பெற்றோருக்கு அறிவுறுத்தினர். மேலும் கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் 10 நாட்கள் விடுமுறையும் வழங்கி உள்ளன.


Next Story