கல்லூரி மாணவரை கொன்ற 2 வாலிபர்கள் கைது


கல்லூரி மாணவரை கொன்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:46 PM GMT)

மும்பை,

மும்பை செம்பூர் வாஷி நாக்கா பகுதியை சேர்ந்தவர் முக்தார் சேக் (வயது19). கல்லூரி மாணவரான இவர் சுன்னாப்பட்டியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் பயின்று வந்தார். கடந்த 3-ந்தேதி கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்த போது அடையாளம் தெரியாத 2 பேர் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் முக்தார் சேக் உடன் பயின்று வந்த மாணவி கண்முன்பே நடந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையே தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர் முக்தார் சேக் ஆஸ்பத்திரி செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சுன்னாப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பெண்ணுடன் ஏற்பட்ட காதல் தகராறு காரணமாக அவரை ஆதித்யா திரிபவன் (19) மற்றும் கல்பா சையத் (20) ஆகிய 2 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் தாராவியில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story