ரெயிலில் சென்ற வடமாநில பயணி திடீர் சாவு


ரெயிலில் சென்ற வடமாநில பயணி திடீர் சாவு
x

ரெயிலில் சென்ற வடமாநில பயணி திடீரென உயிரிழந்தார்.

திருச்சி

மணப்பாறை:

வட மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஒரு ரெயில் சென்று கொண்டிருந்தது. நேற்று காலை திருச்சியை தாண்டி சென்றபோது, அந்த ரெயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கு வந்ததும் நிறுத்தப்பட்டு, அந்த பயணியை இறக்கி அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்சில் ஏற்றினர். ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர், அந்த பயணியை சோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் உத்தரபிரதேச மாநிலம், பாலி மாவட்டம், மித்தி பகுதியை சேர்ந்த கோபால்(52) என்பதும், கன்னியாகுமரிக்கு குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டியில் பயணம் செய்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story