நுரம்பு மண் கடத்திய 2 பேர் கைது


நுரம்பு மண் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 7:00 PM GMT (Updated: 26 Oct 2023 7:00 PM GMT)

நுரம்பு மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே வெத்தலக்காரன் பள்ளம் பகுதியில் உள்ள நிலத்தில் சட்டவிரோதமாக பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் நுரம்பு மண் கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் நுரம்பு மண் கடத்திய 2 பேரை பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நுரம்பு மண் கடத்திய புறவடை கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் பச்சியப்பன் (வயது 40), சாமிசெட்டிப்பட்டியை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் சக்தி (33) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நுரம்பு மண்ணுடன் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story