பொதுமக்களிடம் அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது


பொதுமக்களிடம் அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 7:30 PM GMT (Updated: 26 Oct 2023 7:31 PM GMT)

சிங்காரப்பேட்டை அருகே பொதுமக்களிடம் அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் பெரியதள்ளப்பாடி அம்பேத்கர் நகர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்தார். இதுகுறித்து கேட்ட போலீசாரிடம் தகராறு செய்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது அவர் ஊத்தங்கரை தாலுகா பெரிய தள்ளப்பாடி பகுதியை சேர்ந்த சந்துரு என்கிற தங்கா (22) என்பதும், அவர் மீது ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story