சென்னை மக்களே உஷார்.. 3 நாட்களுக்கு ரெயில் போக்குவரத்தில் முக்கிய மாற்றம்


சென்னை மக்களே உஷார்..  3 நாட்களுக்கு ரெயில் போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
x

மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை பரங்கிமலை- வேளச்சேரி ரெயில் பாதை இணைப்பு பணி, தண்டவாள பராமரிப்பு பணிகளால் நாளை முதல் 3 நாட்களுக்கு ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும், வரும் 3-ந்தேதி வரை தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 10.40 மணி முதல் 11.55 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story