மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


மதுரையில் மேம்பால கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 Oct 2023 3:05 AM GMT (Updated: 30 Oct 2023 7:14 AM GMT)

மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமையவுள்ளன.

மதுரை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும், சிலைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவரின் படத்திற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த உயர்மட்ட மேம்பாலங்கள் அமையவுள்ளன. கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படவுள்ளது. மதுரை-தொண்டி சாலை அப்போலோ சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படவுள்ளது.


Next Story