தி.மு.க. வெற்றி பெறும் என்பதே தமிழக வாக்காளர்களின் மனநிலை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


தி.மு.க. வெற்றி பெறும் என்பதே தமிழக வாக்காளர்களின் மனநிலை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் காலையில் இருந்தே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் பேசிய அவர், " தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பிரசாரத்திற்காக சென்றுள்ளேன். தேர்தலில் தி.மு.க., மற்றும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும் என்பதே தமிழக வாக்காளர்களின் மனநிலையாக உள்ளது." என்றார்.


Next Story