கார் மோதிய விபத்தில்லோடுவேன் பள்ளத்தில் கவிழ்ந்தது ; 11 பேர் படுகாயம்


கார் மோதிய விபத்தில்லோடுவேன் பள்ளத்தில் கவிழ்ந்தது ; 11 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:47 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதிய விபத்தில் லோடுவேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை மேட்டூரில் இருந்து 20 பேர் நேற்று அதிகாலையில் லோடு வேனில் புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றானை அடுத்த சந்திரகிரி பகுதியில் சென்றபோது, பின்னால் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லோடு வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லோடு வேனில் இருந்த முகேஷ் (வயது 21), காளிமுத்து (52), சுரேஷ் (22), மகிழன் (9), சூர்யா (16), மணிமேகலை (32), முருக லட்சுமி (11), மகாலட்சுமி (16), ரித்தீஷ் (11), கார் டிரைவர் ரகுராமன் (38) மற்றும் ராஜகோபால் (50) உட்பட 11 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story