கருங்கற்கள் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது


கருங்கற்கள் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது
x

கருங்கற்கள் ஏற்றி வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புவியியல் மற்றும் சுரங்க துறையின் உதவி புவியியலாளர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் புன்னம் சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் 3 யூனிட் கருங்கற்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் லாரி டிரைவரிடம் கற்கள் கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டு மற்றும் பர்மிட் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரான ஆத்தூர் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த பிரபு (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story