மெஞ்ஞானபுரம் அருகேமனைவிக்கு கத்திக்குத்து:தொழிலாளி கைது


மெஞ்ஞானபுரம் அருகேமனைவிக்கு கத்திக்குத்து:தொழிலாளி கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

மெஞ்ஞானபுரம் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள பிள்ளைவிளையைச் சேர்ந்தவர் கவிதா (வயது 23). இவரது கணவர் முத்துகுமார் (31). தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து கவிதாவிடம் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று குடிபோதையில் வந்த முத்துக்குமார் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென்று கத்தியால் கவிதாவின் தலையில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கவிதாவில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதை பார்த்த முத்துக்குமார் தப்பி ஓடிவிட்டாராம். பலத்த காயங்களுடன் இருந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாசரேத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் தென்காசி அரசு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story