புஞ்சைபுளியம்பட்டி அருகேகுளத்தில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து விபத்து


புஞ்சைபுளியம்பட்டி அருகேகுளத்தில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து விபத்து
x

புஞ்சைபுளியம்பட்டி அருகே குளத்தில் பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியில் 80 ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. இந்த குளத்தின் நீர் வழிப்பாதை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் தேசிபாளையம் பிரிவு அருகே நீர் வழிப்பாதையை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும்போது பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பொக்லைன் எந்திரம் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதன் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story