கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை


கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 25 Oct 2023 7:00 PM GMT (Updated: 25 Oct 2023 7:01 PM GMT)

சங்கரன்கோவிலில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் திருப்பூர் குமரன்நகர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கோட்டி முத்தம்மாள் (வயது 75). வீட்டில் தனியாக வசித்து வந்த இவர் தெரு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கோட்டி முத்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story