சாலைமறியலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் 130 பேர் கைது


சாலைமறியலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் 130 பேர் கைது
x

சாலைமறியலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்ட ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோட்டை மைதானம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். இதில் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 92 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story