நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு கூட்டம்
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நிலுவையில் உள்ள இ பட்டா, உட்பிரிவு, வாரிசு சான்றிதழ், புதிய ரேஷன் கார்டு பெறுவது உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் நிலுவையில் உள்ளது. இது குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story