பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள ஓமகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். அவரது மகள் தேன்மொழி (வயது 15), மிட்டுர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேன்மொழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story