போட்டிகளில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவ-மாணவிகள்


போட்டிகளில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

போட்டிகளில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவ-மாணவிகளை அமலு விஜயன் எம்.எல்.ஏ. அனுப்பிவைத்தார்.

வேலூர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் வேலூரில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் குடியாத்தம் அடுத்த அக்ராவரம், தட்டப்பாறை, கள்ளூர், பாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 47 மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

அவர்கள் நேற்று காலையில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை எம்.எல்.ஏ. வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர் ரவி, ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.மனோகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.சத்தியமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் எஸ்.உதயகுமார், ஐ.சதீஷ்குமார், டி.பிரபு, ஜே.அருண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

படச்செய்தி-கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு நடைபெறும் பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார்.


Next Story