நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய 'ஏ' அணி வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய ஏ அணி வெற்றி
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 25 Sep 2022 9:12 PM GMT (Updated: 25 Sep 2022 9:13 PM GMT)

இந்தியா 'ஏ'-நியூசிலாந்து 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சென்னை,

இந்தியா 'ஏ'-நியூசிலாந்து 'ஏ' அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 'ஏ' 47 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதில் 47-வது ஓவரில் அவர் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததும் அடங்கும். தொடர்ந்து ஆடிய இந்திய 'ஏ' அணி 34 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

பிரித்வி ஷா 77 ரன்கள் விளாசினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 'ஏ' அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடைசி ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.


Next Story