பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: மார்ட்டின் எட்செவிரி அரைஇறுதிக்கு முன்னேற்றம்


பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: மார்ட்டின் எட்செவிரி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

பார்சிலோனா,

களிமண் தரை போட்டியான பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகக் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கேஸ்பர் ரூட் (நார்வே) 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மேட்டியோ அர்னால்டியை (இத்தாலி) விரட்டி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தாமஸ் மார்ட்டின் எட்செவிரி (அர்ஜென்டினா) 7-6 (7-4), 7-6 (7-1) என்ற நேர் செட்டில் கேமரூன் நோரியை (இங்கிலாந்து) போராடி வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 29 நிமிடங்கள் தேவைப்பட்டது.


Next Story