32 அடி உயர மாதா கல்தூண் அர்ச்சிப்பு
வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் 32 அடி உயரமுள்ள மாதா உருவம் பொறித்த கல் தூணை அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது,
புதுச்சேரி
வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் 32 அடி உயரமுள்ள மாதா உருவம் பொறித்த கல் தூணை பேராயர் பிரான்சிஸ் கலிஸ் தலைமை தாங்கி மந்திரித்து அர்ச்சித்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருத்தல அதிபர் பிச்சைமுத்து அடிகளார், உதவி பங்கு தந்தை ஜீவா முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த அர்ச்சிப்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., தொகுதி தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், நிர்வாகிகள் சபரிநாதன், பாஸ்கர், மந்திரி குமார், ஹரி மற்றும் பங்கு பேரவை மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story