தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

புதுச்சேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி

புதுச்சேரி நைனார்மண்டபம் பிரியதர்சினி நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 53). அவரது மனைவி சுதர்கனி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு பாண்டியன், தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு அவர் சாதமும், புதினா சட்னியும் இருப்பதாகவும், அதனை சாப்பிடும்படியும் கோபத்தில் கூறியுள்ளார். பாண்டியன் அதனை சாப்பிடாமல் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். மனைவியின் செயலால் மனவேதனையில் இருந்த பாண்டியன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story