மக்கள் நீதி மய்ய நிர்வாகிக்கு விருது


மக்கள் நீதி மய்ய நிர்வாகிக்கு விருது
x

புதுச்சேரி அரவிந்த் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி மக்கள் நீதி மய்ய நிர்வாகிக்கு விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி அரவிந்த் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி முத்திரையர் பாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் சக்திவேல் பட்டுரோஸ்-க்கு, அரவிந்த் அறக்கட்டளை நிறுவனர் சரவணபெருமாள், லட்சுமி சரவணன் ஆகியோர் மக்கள் சேவகர் விருது வழங்கி பாராட்டினர்.

நிகழ்ச்சியில் புதுவை மாநில மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் சந்திரமோகன் கலந்துகொண்டு வாழ்த்தினார். இதில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் பழனிவேலன், இன்னாசி ராக், ஜெயந்தி சந்திரமோகன், அய்யனார், மகின்பர்வத், எத்திராஜ் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story